தேவமாதாவின்
வணக்கமாதம்
*தேவமாதாவின் வணக்கமாதம்*
*மே மாதம் 02-ம் நாள்*
*ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவதாயின் மகிமையின் பேரில்*
*1. தேவதாய் பிறந்த வேளையில் மாதாவிற்குக் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம் எவ்வளவு முக்கியமானது என்று ஆராய்ந்து பார்க்கிறது.*
சர்வேசுரன் தேவமாதாவிற்குக் கொடுத்த வரங்களெல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானது ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த வரமே. மற்ற மனிதர்களோடு கூடப் பிறக்கிற ஜென்மப் பாவத்தை மாதாவினிடத்திலே நீக்கி அந்த மகத்தான தன்மையை மாதாவிற்கு மாத்திரம் வழங்கினார்.
பரிசுத்த கன்னிமாமரியம்மாள் தேவதாயாராவதற்கு நியமிக்கப்பட்டதாலும், சர்வேசுரன் மாதா போரில் தமது பிரியத்தை வைத்திருந்ததாலும், நரக பாதாளத்தின் பாம்பாகிய பசாசின் தலையை நசுக்குகிறவர்களானதாலும் ஓர் நொடியாயினும் பசாசுக்கு அடிமையாயிருக்கவும் சர்வேசுரனுடைய கோபத்துக்குப் பாத்திரமாயிருக்கவும் கூடவில்லை. அத்தகைய பொல்லாப்பு தேவ நீதிக்கும் தெய்வீக பரிசுத்தத்தனத்துக்கும் பொருந்தாது. ஆகையால் பரிசுத்த கன்னிமாமரியம்மாள் உற்பவித்த முதல் நொடி துவக்கி எப்போதும் மாசில்லாதவர்களென்றும், மாதாவினுடைய திரு ஆத்துமம் சகல வரப்பிரசாதங்களினாலும் புண்ணியங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததென்றும், தெய்வீகத்துக்குத்*தேவமாதாவின் வணக்கமாதம்*
*மே மாதம் 02-ம் நாள்*
*ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவதாயின் மகிமையின் பேரில்*
*1. தேவதாய் பிறந்த வேளையில் மாதாவிற்குக் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம் எவ்வளவு முக்கியமானது என்று ஆராய்ந்து பார்க்கிறது.*
சர்வேசுரன் தேவமாதாவிற்குக் கொடுத்த வரங்களெல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானது ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த வரமே. மற்ற மனிதர்களோடு கூடப் பிறக்கிற ஜென்மப் பாவத்தை மாதாவினிடத்திலே நீக்கி அந்த மகத்தான தன்மையை மாதாவிற்கு மாத்திரம் வழங்கினார்.
பரிசுத்த கன்னிமாமரியம்மாள் தேவதாயாராவதற்கு நியமிக்கப்பட்டதாலும், சர்வேசுரன் மாதா போரில் தமது பிரியத்தை வைத்திருந்ததாலும், நரக பாதாளத்தின் பாம்பாகிய பசாசின் தலையை நசுக்குகிறவர்களானதாலும் ஓர் நொடியாயினும் பசாசுக்கு அடிமையாயிருக்கவும் சர்வேசுரனுடைய கோபத்துக்குப் பாத்திரமாயிருக்கவும் கூடவில்லை. அத்தகைய பொல்லாப்பு தேவ நீதிக்கும் தெய்வீக பரிசுத்தத்தனத்துக்கும் பொருந்தாது. ஆகையால் பரிசுத்த கன்னிமாமரியம்மாள் உற்பவித்த முதல் நொடி துவக்கி எப்போதும் மாசில்லாதவர்களென்றும், மாதாவினுடைய திரு ஆத்துமம் சகல வரப்பிரசாதங்களினாலும் புண்ணியங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததென்றும், தெய்வீகத்துக்குத் தேவாலயமாகிய மாதா உள்ளத்தில் அற்பப் பாவ முதலாய்ப் பிரவேசித்ததில்லையென்றும் திருச்சபையில் வழங்கி வரும் சத்தியம் நமக்குத் தெளிவிக்கின்றது. ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்தது, விசுவாச சத்தியமென்று பரிசுத்த பிதா ஒன்பதாம் பத்திநாதர் 1854-ஆம் ஆண்டு வரையறுத்துக் கூறினார். இதுவே தேவமாதாவின் பிரதானமான மகிமை. நாமும் இந்த மேலான மகிமையை மதித்து ஸ்துதித்து அப்படியே மரண பரியந்தம் விசுவசிப்போமென்று உறுதியான பிரதிக்கினை செய்வோமாக. தேவாலயமாகிய மாதா உள்ளத்தில் அற்பப் பாவ முதலாய்ப் பிரவேசித்ததில்லையென்றும் திருச்சபையில் வழங்கி வரும் சத்தியம் நமக்குத் தெளிவிக்கின்றது. ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்தது, விசுவாச சத்தியமென்று பரிசுத்த பிதா ஒன்பதாம் பத்திநாதர் 1854-ஆம் ஆண்டு வரையறுத்துக் கூறினார். இதுவே தேவமாதாவின் பிரதானமான மகிமை. நாமும் இந்த மேலான மகிமையை மதித்து ஸ்துதித்து அப்படியேb மரண பரியந்தம் விசுவசிப்போமென்று உறுதியான பிரதிக்கினை செய்வோமாக.
*2. மாதா அந்த வரப்பிரசாதத்தை எவ்வளவு அருமையாய் மதித்தார்கள் என்று ஆராய்ந்து பார்க்கிறது.*
பரிசுத்த கன்னிமாமரியம்மாள் சர்வேசுரனுடைய மாதாவானபடியால், மனிதர்களுக்கும் சம்மனசுகளுக்கும் இராக்கினியும் சகல உலகங்களுக்கும் ஆண்டவளுமாய் இருக்கிறது நியாயமே. ஆனால் தேவதாய் என்னும் இந்த உன்னதமான மகிமையைவிடப் பாவமில்லாமல் உற்பவித்து எப்போதும் மாசில்லாமலிருக்கிறதே மாதாவிற்குப் பிரியமாயிருந்தது. ஏனெனில் இதனால் சர்வேசுரனுக்கு உகந்தவர்களாய் இருக்கிறபடியினால், முன் சொல்லப்பட்ட இரண்டு மகிமையில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று சர்வேசுரன் கட்டளையிட்டால், விவேகமுள்ள அந்தக் கன்னிகையானவர்கள் தேவதாயாக இருக்கிறதைவிட ஜென்மப் பாவமில்லாமல் இருக்கிறதே மேல் என எண்ணி இதையே தெரிந்து கொள்வார்களென வேதபாரகர் உறுதியாக எழுதி வைத்திருக்கிறார்கள். ஒரு நொடியாகிலும் அற்பப் பாவத்தோடிருக்கிறதும் அதனால் சர்வேசுரனுடைய கோபத்துக்குப் பாத்திரமாயிருக்கிறதும் பெரிய நிர்ப்பாக்கியத்துடன் தனக்கு எந்த நன்மை வந்தாலும் எவ்வித சந்தோஷமும் இல்லையென்று நினைப்பார்கள்.
மனிதர் அப்படி நினைப்பார்களோ? ஐயையோ? பாவத்தில் விழுந்து அதில் அநேக நாள் அநேக மாதம் கிடந்து, உத்தம மனஸ்தாபப்படாமலும் பாவசங்கீர்த்தனம் செய்யாமலும் இருக்கிறார்கள். ஆனால் தேவமாதா நினைத்தது போலவே சகல பொல்லாப்புக்களையும்விட பாவமானது பெரிய பொல்லாப்பாய் இருக்கிறதென்றும் அதற்கு மாத்திரமே பயப்பட வேண்டுமென்றும் அறிந்து உலகத்திற்கடுத்த புத்தி சாமர்த்திய முதலான நன்மைகளைவிட இஷ்டப்பிரசாதம், புண்ணியம், பரிசுத்தத்தனம் முதலான ஆத்தும நன்மைகள் மேலானவை என்று கண்டுணருவோமாக.
*3. அந்த வரப்பிரசாதத்தைக் காப்பாற்றுகிறதற்காக மாதா பட்ட பிரயாசை எவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கிறது.*
பரிசுத்த கன்னிமாமரியாள் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்து பாவத்துக்குச் சார்புள்ள குணமில்லாமல், இஷ்டப்பிரசாதத்தில் நிலைபெற்றவர்களாயிருந்தாலும், பாவத்தில் விழாதபடிக்குச் சர்வேசுரன், மாதாவிற்கு உதவி செய்திருந்தாலும், பாவத்திற்குப் பயந்து ஐம்பொறிகளை அடக்கி மிகுந்த விவேகத்துடனே நடந்தார்கள். சோம்பலை நீக்கித் தனது அந்தஸ்தின் கடமைகளைப் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி சரீரத்தை ஒறுத்துத் தபசு செய்து நாள்தோறும் அதிகம் அதிகமாய்ச் சுகிர்த புண்ணியங்களைச் செய்யப் பிரயாசைப்படுவார்கள்; நாமோவெனில் இஷ்டப்பிரசாதத்தில் நிலைகொள்ளாமல், ஜென்மப் பாவத்தோடும் துர்க்குணத்தோடும் பிறந்திருப்பதினாலும், பாவத்திற்கு மனச்சார்புள்ளவர்களாய் இருப்பதினாலும், புண்ணியத்தைச் செய்யாமல் அநேக பாவங்களில் விழுந்தவர்களாய் இருப்பதினாலும் தேவமாதா நமக்குக் காண்பிக்கிற சுகிர்தமாதிரிகையைப் பின்பற்றாது அசமந்தமாயிருக்கிறோம். ஆகையால் மாதாவை நோக்கிப் பின்வருமாறு வேண்டிக்கொள்வோமாக.
*செபம்*
கல்வாரி நாதருடைய மாதாவே! ஆதிமனிதன் பாவம் செய்த பிறகு பாம்பினுடைய தலையை நசுக்க சர்வேசுரனால் குறிக்கப்பட்டவர்கள் நீரே, பசாசின் கபட தந்திரத்தில் ஒருக்காலும் அகப்படாமல் பசாசை செயித்தவர்கள் நீரே, பசாசானது உமது திருப்பாதத்தின் கீழிருக்கிறதைக் கண்டு நான் சந்தோஷப்படுகிறேன். மிகுந்த இரக்கமுள்ள கன்னி மாமரியாயே, என் மாற்றானாகிய பசாசு எனக்குச் செய்த தந்திரங்களைப் பாரும். உம்முடைய உதவியைக் கேட்டு உம்மை பக்தியோடு வேண்டிக் கொண்டிருந்தால் பசாசு என் ஆத்துமத்தில் இத்தனை கேடுகளை வருவித்திருக்க மாட்டாது. இனிமேல் எனக்கு வருகிற தந்திரங்களில் தாழ்ச்சியான நம்பிக்கையோடு உம்மை நான்மன்றாடுவேன்.
நேசத்துக்குரிய தாயாரே! வல்லபம் பொருந்திய கன்னிகையே என் துர்க்குணங்களை அடக்கி என் சத்துருக்களை ஜெயிக்கும்படியாகவும் நீர் என்பேரில் இரங்கி எனக்கு இந்த உலகத்தில் உதவி செய்து மோட்ச இராச்சியத்தில் உம்மோடுகூட எனக்கு இடம் கிடைக்கும்படியாகவும் மன்றாடுவீரென்று நம்பிக்கையாய் இருக்கிறேன். ஆமென்.
*புனித பெர்நர்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். (இப்படி மூன்றுமுறை சொல்லவும்)
1, பர. 3, அருள். திரி.
*இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :*
உம்முடைய மாசில்லாத கன்னிமையையும் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மகிமையையும் பார்த்து பரிசுத்த கன்னிமரியாயே, என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் சுத்தப்படுத்தியருளும்.
இரண்டாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :
தேவமாதாவைக் குறித்து ஓர் ஏழைக்கு தருமம் கொடுக்கிறது